/

'தமிழக நிதிநிலை சரியான பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும்'

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:28 am

DIN

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு பல மடங்கு வரி உயர்த்தியதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறினார். 

அரசின் நிதிநிலை சரியான பிறகு ஒவ்வொரு கோரிக்கைகளாக திமுக அரசு நிறைவேற்றும் என்றும்,

வாக்குறுதிகளை ஒரே நாளில், ஒரே மாதத்தில் நிறைவேற்றுவோம் என சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.