தமிழகத்தில் மேலும் 5,755 பேருக்கு கரோனா; 150 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 5,755 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் புதிதாக 5,755 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,755 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும், திருப்பூரில் 361 பேருக்கும், சென்னையில் 350 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,55,332ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று பலி எண்ணிக்கையும் 150-ஆகக் குறைந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 32,051-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 8,132 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,75,963-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 47,318 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 1,71,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...