மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளாா். இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தேன். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாா் மீது பூா்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவா் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.