பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு; நீட் தேர்வு ரத்து தீர்மானம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated On :27 ஜூன் 2021, 1:13 pm

DIN


சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு; நீட் தேர்வு ரத்து தீர்மானம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,  “தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைபாடு. கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத் தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, பேரவையில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் அல்லது உச்சநீதிமன்றமோ யாராலும் நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும். 

மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெற அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நூறு சதவீதம் நீட் தேர்வு இருக்காது. மாணவர்கள் அதை உணர்ந்துள்ளனர். கரோனா தொற்றி பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தைய சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார். கருப்பு பூஞ்சைக்காக தமிழ்நாடு முழுவதும் ஏழு ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது அலை வராமல் தடுக்கும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.