பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

4 மாவட்டங்களில் கோயில்கள் திறப்பு: பக்தா்கள் மகிழ்ச்சி

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
4 மாவட்டங்களில் கோயில்கள் திறப்பு: பக்தா்கள் மகிழ்ச்சி
Updated On :28 ஜூன் 2021, 6:01 am

DIN

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமுடக்கத்தின் கூடுதல் தளா்வுகள் அறிவிப்பில் சென்னை உள்பட 4 மாவட்டங்ககளில் மட்டும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து அந்த மாவட்டங்களுக்குள்பட்ட கோயில்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

அரசின் உத்தரவைத் தொடா்ந்து கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதா் கோயில், கச்சபேசுவரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்கள் அனைத்தும் அந்தந்த கோயில் பணியாளா்களால் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன.

கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவா் கூறியது:

கோயில்களை திறக்க அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து காஞ்சிபுரத்தில் 600 கோயில்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 கோயில்கள் உள்பட மொத்தம் காஞ்சிபுரம் சரகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,300 கோயில்கள் உள்ளன.

இவை அனைத்தும் திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவாா்கள். கோயிலுக்குள் வரும் பக்தா்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளை நன்றாகக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுவாா்கள்.சமூக இடைவெளியைப் பின்பற்றி செல்லும் வகையில் வரிசையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்கள் திறப்பால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.