மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரம் அருகே துணிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

ஈரோட்டிலிருந்து சுமார் 10 டன் எடையுள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தாவுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டது.

News image
விழுப்புரம் அருகே துணிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து
Updated On :10 மார்ச் 2021, 8:18 am

DIN

ஈரோட்டிலிருந்து சுமார் 10 டன் எடையுள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தாவுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டது. லாரியை திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சுரேஷ்(37) என்பவர் ஓட்டி‌வந்துள்ளார். பகல் 11.30 மணி அளவில் விழுப்புரத்தை கடந்து லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது வி.சாலை என்ற இடத்தில் சென்றபோது திடீரென லாரியின் டயர் வெடித்துள்ளது.

Story image

என்ன என்று பார்க்க லாரியை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது லாரியின் பின்பக்கத்திலிருந்து புகை கிளம்பியுள்ளது. சற்று நேரத்தில் லாரியில் இருந்த துணி‌ மூட்டைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். 

Story image

உடனே விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை கட்டுப்படுத்தி அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து 1 மணி‌ நேரமாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Story image

தீ விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ‌போலீஸார் அங்கு வந்து போக்குவரத்தை மாற்றி வாகனங்களை வேறுபாதையில் அனுப்பினர். தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.