இதுவரை, தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 11,25,703. இதில், கோவிஷீல்டு 10,98,857 நபர்கள் போட்டுக் கொண்டனர். கோவாக்சின் 26,846 நபர்கள் போட்டுக் கொண்டனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டு பிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தொழில் நிமித்தமாக வெளியில் செல்கிறோம். பணி நிமித்தமாக அலுவலகத்திற்கு செல்கிறோம். காய்கறிகள் வாங்க கடைக்குச் செல்கிறோம். பொருள்கள் வாங்குவதற்கு கடைக்குச் செல்கின்றோம்.