2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை மக்களுக்கு கரோனா தடுப்பூசி அவசியம்: மாநகராட்சி

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 மார்ச் 2021, 5:18 am

DIN

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது. சென்னையில் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. 

சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் பாதிப்பு இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.