திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிசிடிவி மூலம் தபால் வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும்: நீதிமன்றம்

அஞ்சல் வாக்குகளைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :26 மார்ச் 2021, 12:07 pm IST

அஞ்சல் வாக்குகளைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், எந்த குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில் அஞ்சல் வாக்குப் பதிவு நடைமுறை இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், 29-ம் தேதிக்குள் அஞ்சல் வாக்கு அளிப்போரின் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தபால் வாக்காளர்களின் பட்டியல் வேட்பாளருக்கு வழங்கிய 24 மணி நேரத்துக்கு பிறகே அஞ்சல் வாக்கு பெற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,

அஞ்சல் வாக்குகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கையெழுத்து பெறும் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.