கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2021, 6:07 am

DIN

ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாபிராமைச் சேர்ந்த எம்ஜிஆர் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். 

பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திரும்ப அளித்து விட்டு எம்ஜிஆரை நினைவுகூறும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தேன். 

இந்த தேர்தலில் எங்கள் கட்சி  ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி தொகுதியில் பொது சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அந்த சின்னத்தை அங்கு போட்டியிடும் எனக்கு ஒதுக்கவில்லை. எனவே ஆவடி தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.  ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், சின்னங்கள் கேட்பது, ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.