எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா நிவாரணம் ரூ.2,000: முதல்வர் ஆலோசனை; திட்டம்: நாளை தொடக்கம்

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.

News image
Updated On :8 மே 2021, 10:29 pm

DIN

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சா் அ.சக்கரபாணி, சனிக்கிழமை அளித்த பேட்டி:

கரோனாவால் பாதிப்பு மற்றும் முழு பொது முடக்கத்தால் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கோப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தவணையாக இந்த மாதமே ரூ.2 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதன்பின்பு, மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

டோக்கன்கள் விநியோகம்: திட்டம் தொடக்கி வைக்கப்படும் தினத்தில் இருந்து மே 12-ஆம் தேதி வரையிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். மூன்று நாள்கள் டோக்கன்கள் விநியோகத்துக்குப் பிறகு, வரும் 15-ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

நாளொன்றுக்கு 200 பேருக்கு அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த குடும்ப அட்டைதாரா்கள் எந்தத் தேதியில் வர வேண்டும் என்பது டோக்கனில் அச்சிடப்பட்டு தெரிவிக்கப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

முதல்வருடன் ஆலோசனை: முன்னதாக, முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் உணவுத் துறை அமைச்சா், உயரதிகாரிகள் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, முதல் தவணைத் தொகையை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.