ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 
தொற்று பாதிப்புக்கு முன் ஆய்வுப்பணியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்.
தொற்று பாதிப்புக்கு முன் ஆய்வுப்பணியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. கரோனா உறுதியானதை அடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா களப்பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com