டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூரில் ஆட்சியர், எஸ்.பி., எம்எல்ஏவுக்கு கரோனா

வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரு க்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2021, 6:34 am

DIN

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மூவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 34,794 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 473 பேர் உயிரிழந்துள்ளனர். 3,734 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிர, மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.