பொது இடங்களில் ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்கும்: மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.


பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மூலிகைகள் கலந்து ஆவி பிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பொது இடங்களில் இதனை செய்தால் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, சென்னை, திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் ஆவி பிடிக்கின்றனர்.
பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று வர வாய்ப்புள்ளது. இதனை நாம் ஊக்குவிக்கக் கூடாது
ஆவி பிடித்தல் போன்ற சுய வைத்தியங்களை மருத்துவகள் பரிந்துரையின்றி மக்கள் செய்ய வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...