எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :19 மே 2021, 4:19 am

DIN


சென்னை: சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு நாளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ள. நேற்று ஓரே நாளில் 364 பேர் உயிரிழந்த நிலையில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,329 -ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் 24 ஆம் தேதி வரை அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கியுள்ளது. 

இந்நிலையில்,  சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.