
கோவை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்திருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை இறக்கிவிட்டு கரோனா வார்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்த தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்துள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம்
இந்நிலையில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீயை அனைத்தனர். ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் உருளையில் ஏற்பட்ட கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.