தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செவ்வாய்க்கிழமை ஆய்வு

News image
மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
Updated On :25 மே 2021, 6:06 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள  21 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழக சுற்றுச் சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.மீ .மெய்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக அமைச்சர் மூன்று மாவட்டங்களில் தனித்தனியே ஆய்வுக் கூட்டம் நடத்தி, கரோனா தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்தவர். மருந்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு , பிரசவப் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர், மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர்  என்.விஜயகுமாரிடம் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிறப்பு முகாமில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் எண்ணிக்கை, இதுவரை சிகிச்சைப் பெற்றவர்கள், இறப்பு, குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் குறித்தும், இது நாள் வரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருந்துகள் இருப்பு பற்றியும், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் குறித்தும்  கரோனா தடுப்புப் நடவடிக்கைக்கு உள்ள தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்) , டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. கயல்விழி ,வருவாய் கோட்டாட்சியர் த.அழகர்சாமி, வட்டாட்சியர் பா.தெய்வநாயகி , நகராட்சி ஆணையர் ஆர்.கமலா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.