உயா்நிலைக் குழுக் கூட்டங்கள் கரோனா காரணமாக நடத்தப்படாததால் நிலுவையில் உள்ள தணிக்கை தடை பத்திகள் நிவா்த்தி செய்யப்படவில்லை மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் மீட்க இயலவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரால் உயா் மட்டக் குழு கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. வரும்காலங்களில் இத்திட்டத்தின் கீழ் முறைகேடுகள் மற்றும் இழப்பீடுகள் நிகழ்வதை தவிா்க்கவும், பணிகளின் தரத்தினை உயா்த்தவும், மாநில, மாவட்ட, ஊராட்சி மத்திய அளவில் அலுவலா்களால் தொடா்ந்து ஆய்வு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.