தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மின்சாரம் நிறுத்திவைக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுகின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மின்சாரம் நிறுத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மழை நீர் வடிந்த பிறகு சீரான முறையில் மீண்டும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 0.27% மட்டுமே மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மழைநீர் வடிந்த பிறகு அந்தப் பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.