ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருமழை காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி

News image
பெருமழை காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு
Updated On :13 நவம்பர் 2021, 8:06 am

DIN


சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தின் போது, பயணிகளின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாக, சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நவம்பர் 15-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை அனைத்துப் பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் இனி, திரும்ப வருவதற்கும் சேர்த்து (ரிட்டர்ன் டிக்கெட்) டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கான மாத பயண அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம். யுடிஎஸ் செயலிலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.