இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிப்பு: ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்தது

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்துள்ளது.

News image

மானாமதுரை கூட்டுறவு  சங்கத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

Updated On :14 நவம்பர் 2021, 4:04 am


மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மழை காரணமாக கொசு உற்பத்தியாகி மாடுகள் கொசுக்கடியால் அவதிப்படுவதால் அவற்றின் பால் கறவை திறன் பாதிக்கப்பட்டு கூட்டுறவு பால் சங்கங்களுக்கு கொள்முதலுக்கு கொண்டுவரப்படும் பாலின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவும ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. 

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களில்  உறுப்பினர்களாக உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து. தினமும் காலை, மாலையில் கொள்முதல் செய்யப்படும் பால் இரு நேரங்களிலும் கூட்டுறவு பால் சங்கங்களில் மக்களுக்கு சில்லரை விலையில்  விற்பனை செய்தது போக மீதமுள்ள பால் கேன்களில் அடைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. 

கடந்த சில நாள்களுக்கு முன்புவரை இப் பகுதிகளில் மாடுகளின் கறவைத்திறன் கூடி பால் உற்பத்தி அதிகரித்ததால் சில்லறை விற்பனை போக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவு தொடர்ந்து பலநூறு லிட்டராக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடி அதிகரித்துள்ளது. மாடுகள் கொசுக்கடியால் அவதிப்படுவதால் மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கறவை திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. 

இதனால் மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்களுக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் பாலின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சில்லரை விலையில் பால் விற்பனை செய்தது போக காரைக்குடி ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் பாலின் அளவு ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வருகிறது. 

மழை ஓய்ந்து வெயில் நிலவி சீரான காலநிலை ஏற்பட்டு கொசு உற்பத்தி குறைந்தால் தான் மாடுகளுக்கு பால் உற்பத்தி கூடுதலாகி கறவை திறன் அதிகரிக்கும் என  மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.