ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் மழையால் 2,500 வீடுகள் சேதம்; 54 பேர் பலி: டி. ஆர்.பாலு

தமிழகத்தில் பெய்த மழையால் சுமார் 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 54 பேர் பலியாகியுள்ளதாகவும் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
டி.ஆர்.பாலு
Updated On :17 நவம்பர் 2021, 5:59 am

DIN

தமிழகத்தில் பெய்த மழையால் சுமார் 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 54 பேர் பலியாகியுள்ளதாகவும் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தில்லி சென்றுள்ள திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசியது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள், 50 ஆயிரம் ஹெக்டார் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், 54 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஆய்விற்கு பிறகு முதற்கட்டமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பை சீரமைக்க முதல்கட்டமாக மத்திய அரசிடமிருந்து ரூ. 550 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. நிரந்தர நிவாரணமாக ரூ. 2,079 கோடி கேட்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசுத் தரப்பிலிருந்து 6 பேர் கொண்ட குழுவானது வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக இன்று மாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.