தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜிவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய பேரறிவாளனின் மனு டிச.7-ல் விசாரணை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

News image

பேரறிவாளன்

Updated On :24 நவம்பர் 2021, 12:25 pm

DIN

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று  தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளார். 

இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி இந்த வழக்கினை விசாரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.