தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 739 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,23,245 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 764 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை?
இதுவரை மொத்தம் 26,78,371 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,432 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 8,442 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
கோவை - 112
சென்னை - 107
ஈரோடு - 76