சென்னையில் மீண்டும் அதிகாலை முதல் மழை! 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. 
மழையில் குடை பிடித்தப்படி பள்ளிச் செல்லும் மாணவிகள்.
மழையில் குடை பிடித்தப்படி பள்ளிச் செல்லும் மாணவிகள்.


சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. 

இதையும் படிக்க | நகா்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு
தாம்பரம், பல்லாவரம், கிண்டி, போரூர், பெருங்களத்தூர், வேளச்சேரி, அடையார், நுங்கம்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

மாநகரில் மீண்டும் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com