/

ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மச்சாவு

ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

News image
மர்மமான முறையில் உயிரிழந்த ஜவுளி வியாபாரி முருகன்.
Updated On :28 ஜனவரி 2024, 5:34 am

DIN


ஆலங்குளம்: ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன்(36). பைக்கில் சென்று ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். அவர் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவர் ஆலங்குளம் மெயின் ரோடு ஊர் மடை அருகில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 

தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.