

தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள்தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16.05 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.