மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எடப்பாடி பகுதியில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதன் பொன்விழா ஆண்டின் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 6:06 am

DIN

எடப்பாடி: அதிமுக தொடங்கி 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதன் பொன்விழா ஆண்டின் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் பொன் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான கரட்டூர் மணி அதிமுகக் கொடியினன ஏற்றி வைத்து, ஏழை எளியோர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். மூல பாதை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையிலான அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, எளியோர்களுக்கு நல உதவிகளை வழங்கினர். எடப்பாடி நகரப் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் ஏ.எம்.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்றத் தலைவர் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி, நாராயணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.