மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீர்காழி கொள்ளிடத்தில் அதிமுக பொன்விழா

அதிமுக 50-வது ஆண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 9:42 am

DIN

அதிமுக 50-வது ஆண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்து, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவருமான பி.வி பாரதி, மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் வினோத் வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

Story image

இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்லையன் முன்னாள் எம்எல்ஏ சக்தி ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  அம்சேந்திரன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலாளர் நற்குணம் தலைமையில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் கடைவீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Story image

இதில் அவைத்தலைவர் பாரதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ஆனந்த நடராஜன், சம்பந்தம், இனியன், சத்தியமூர்த்தி, சொக்கலிங்கம், நாகரத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.