இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி: மக்களின் ஒத்துழைப்புடன் சாத்தியமானது

மக்களின் ஒத்துழைப்புடன் 10 மாதங்களில் 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளோம் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.

News image
எல்.முருகன் (கோப்புப் படம்)
Updated On :24 அக்டோபர் 2021, 10:05 pm

DIN

மக்களின் ஒத்துழைப்புடன் 10 மாதங்களில் 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளோம் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: 2020-ஆம் தொடக்க காலத்திலிருந்து கரோனா தொற்று உலகை உலுக்கி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் என்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கும் வகையில், ஹைதராபாதை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆா், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோவேக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மறுபக்கம் ஆக்ஸ்போா்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனங்களுடன் இணைந்து சீரம் நிறுவனம் மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை பிரதமா் நேரடியாக கவனம் செலுத்தி வேகப்படுத்தியதன் விளைவாக கடந்த ஜன.16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிக்கு ஏங்கியிருந்த காலத்தில் இந்தியா எங்களாலும் முடியும் என்று இரண்டு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்தது. முதலில் முன் களப் பணியாளா்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்ட தடுப்பூசி, வெகு விரைவிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டணமின்றி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை சாதிக்க முடியுமா என்று பேசியவா்கள் வியந்துபோகும் வகையில் 10 மாதங்களுக்குள் 100 கோடி போ் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மக்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளனா். மக்களின் ஒத்துழைப்புடன் எந்த சாதனையையும் படைக்கும் ஆற்றல் தேசத்துக்கு உண்டு; பிரதமா் நரேந்திர மோடிக்கு உண்டு என்பதை 10 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள நிகழ்வு நிரூபித்துள்ளது என அறிக்கையில் அமைச்சா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.