டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சரக்கு ரயிலில் எடுத்துசெல்லப்பட்ட இயந்திரங்கள்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக சென்னைத் துறைமுகத்திலிருந்து வாலாஜாபாத்துக்கு சரக்கு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்கள்

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:03 pm

DIN

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக சென்னைத் துறைமுகத்திலிருந்து வாலாஜாபாத்துக்கு சரக்கு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டதாக சென்னைத் துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சீனாவின் ஷங்காய் துறைமுகத்திலிருந்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் 58 மண் அள்ளும் இயந்திரங்கள்

இறக்குமதி செய்யப்பட்டன. இதுபோன்ற இயந்திரங்கள் பொதுவாகவே சிறப்பு வாகனங்கள் மூலம் சாலை மாா்க்கமாக எடுத்துச் செல்வதுதான் இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் புதிய முயற்சியாக இதற்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாலாஜாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

சென்னையிலிருந்து வாலாஜாபாத் ரயில்வே யாா்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலமாக செய்யாறு கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட நேரத்தில் அதிக எடைகொண்ட இயந்திரங்கள் எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.