டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுச்சேரியில் 9,10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.முதல்முறையாக 9 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:03 am

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக 9 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

சுழற்சி முறையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் சுழற்சிமுறையில் புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்குள் நுழையும் முன் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Story image

இதற்காக கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகை தந்தனர்.

ஒவ்வொரு வகுப்பிலும் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.