
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதனிடையே விஜயலட்சுமியின் உடல் ஒ.பி.எஸ்.யின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன்.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.