டோக்கியோ பாராலிம்பிக் இறகுப்பந்துப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாராலிம்பிக்சில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள இறகுப்பந்துப் போட்டியில் நமது வீரர்கள் பிரமோத் பகத்தும் மனோஜ் சர்க்காரும் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதையும் படிக்க- துரோகம் இழைத்தவர்களுடன் கூட்டணி கிடையாது: மகா. பாஜக தலைவர்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு எனது பாராட்டுகளையும்; அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் விளையாட இருக்கும் பிரமோத் பகத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.