சென்னை: பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், தந்தை பெரியாரின் செயல்கள், போராட்டங்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாள்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம்.
இனி ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்.
இதையும் படிக்கலாமே.. நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. சாதிய ஏற்றுத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம், பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.