ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரியார் பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்

பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

News image

பெரியார் பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்

Updated On :6 செப்டம்பர் 2021, 9:18 am

DIN


சென்னை: பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,  தந்தை பெரியாரின் செயல்கள், போராட்டங்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாள்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம்.

இனி ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும். 

இதையும் படிக்கலாமே.. நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச  தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. சாதிய ஏற்றுத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம், பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.