/

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு: 2020-ல் வரதட்சணை கொடுமைக்கு 40 பேர் பலி

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டைவிட 2020இல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2021, 10:54 am

DIN

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டைவிட 2020இல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

"2019ஆம் ஆண்டு 2,478 ஆக இருந்த கொலை முயற்சி வழக்குகள் 2020ஆம் ஆண்டு 2,548 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 2019-ல் 19,041 ஆக இருந்த அடிதடி வழக்கு 2020இல் 20,867 ஆக அதிகரித்துள்ளது.

1,700 ஆக இருந்த வன்முறை வழக்கு 2,122 ஆகவும், 370ஆக இருந்த பாலியல் வழக்கு  404 ஆகவும், 28 ஆக இருந்த வரதட்சணை கொடுமை மரணங்கள் 40ஆகவும் ஓராண்டில் அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 2020-ல் 7,39,864 வழக்குகள் பதிவாகியுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.