சென்னை வெளிவட்ட சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்தப் பிறப்பித்த உத்தரவு செல்லும்உயா் நீதிமன்றம்
சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.


சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னையில் 60 கிலோ மீட்டா் தூரத்துக்கான வெளிவட்டச் சாலை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. இரு கட்டடங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து, நெமிலிச்சேரி வரை 29.65 கிலோமீட்டா் தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி நில உரிமையாளா்கள் ஆனந்த், கங்கா ஆனந்த் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்திருந்தனா். நெடுஞ்சாலை சட்டப்படி தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதாக, மனுக்களில் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சட்டத்தின்படி, தகுந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுதான் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை அடுத்து நிலங்கள் கையகப்படுத்துவதற்குரிய அனைத்து நடைமுறைகளையும் அரசு பின்பற்றியுள்ளதாகக் கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...