புதுவையில் ஒரே நாளில் 128 பேருக்கு தொற்று
புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,384-ஆக அதிகரித்த நிலையில், நேற்று ஒரே நாளில் 122 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால், புதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,22,631 ஆனது. இதுவரை 8.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் 88 பேருக்கும் காரைக்காலில் 32 பேருக்கும் மாஹேவில் 8 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த 75 வயது நபர் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,829-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.46 சதவீதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...