மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921ஆம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு.
இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று!
மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! - என்று தெரிவித்துள்ளார்.