தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்துக்கு வந்துள்ள 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாமை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று பிற்பகல் 12.45 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!

வருண் சக்கரவர்த்தி செய்ய வேண்டியது என்ன? பியூஸ் சாவ்லா அறிவுரை!

அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்தது ஏன்?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

