தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்?: நாளை ஆலோசனை
தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 7,800-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையும் படிக்க: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?: இன்று ஆலோசனை
நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை (ஏப். 15) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...