
அர்ச்சகர்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை: அரசு விளக்கம்
காலியாகவுள்ள அர்ச்சகர்கள், ஓதுவார், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என அனைவரும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அர்ச்சகர்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீதரன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே கோயில் செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவதாக அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
படிக்க | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே கோயில் செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அடிப்படை கல்வித்தகுதியுடன் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறநிலையத் துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதினால் இணை ஆணையர், துணை ஆணையரை அணுகலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.