அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பேசியது:

நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ. 85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதிற்கும் இருப்பில் உள்ளதிற்கும் வித்யாசம் இருக்கின்றது.

அடுத்த கட்ட ஆய்வு நடத்தப்பட்டு முழுமையான தவறுகளை கண்டறிந்து தவறு செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதேபோல், தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்விற்கு பிறகு அதன் உண்மை நிலையும் தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com