தமிழகத்தில் புதிதாக 698 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 698 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 698 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. 1,01,794 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 698 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 746 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,33,346 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26,88,888 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 36,575 பேர் பலியாகிவிட்டனர்.

இன்றைய நிலவரப்படி 7,883 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள முதல் மூன்று மாவட்டங்கள்:

  • சென்னை - 125
  • கோவை - 112
  • ஈரோடு - 60

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com