தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் நைஜீரியாவிலிருந்து வந்த 47 வயதுடையவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலும், விமானத்தில் வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு புதியவகை கரோனா இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றை எண்ணி பதற்றம் அடைவதை விட மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 15 சதவிகிதம் மக்கள் இன்னும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.  1,400 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com