அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பள்ளி விபத்துக்கு காரணம் என்ன? நெல்லை ஆட்சியர் விளக்கம்

திருநெல்வேலியில் உள்ள சாஃப்டர் பள்ளியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது குறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டியளித்துள்ளார்.

News image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டி. உடன் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளார்.

Updated On :17 டிசம்பர் 2021, 11:26 am

திருநெல்வேலியில் உள்ள சாஃப்டர் பள்ளியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது குறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேட்டியளித்துள்ளார்.

விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டது. அதில், கழிவறையின் முன்பக்க சுவரை அடித்தளம் இல்லாமல் கட்டியதே சுவர் இடிந்ததற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.