கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 294

தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2021, 3:07 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக பாதிக்கப்பட்ட 739 பேரில் 5 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்கள். மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள் 5 பேர். பிகாரிலிருந்து வந்தவர் ஒருவர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,46,000 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 614 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,02,588 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,758 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,654 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 294 
செங்கல்பட்டு - 64
கோவை - 78

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.