தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 294

தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக பாதிக்கப்பட்ட 739 பேரில் 5 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்கள். மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள் 5 பேர். பிகாரிலிருந்து வந்தவர் ஒருவர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,46,000 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 614 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,02,588 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,758 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,654 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 294 
செங்கல்பட்டு - 64
கோவை - 78

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com