தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக பாதிக்கப்பட்ட 739 பேரில் 5 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்கள். மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள் 5 பேர். பிகாரிலிருந்து வந்தவர் ஒருவர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,46,000 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மும்பையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டலாம்: ஆதித்ய தாக்கரே
மேலும் 614 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 27,02,588 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,758 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 6,654 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 294
செங்கல்பட்டு - 64
கோவை - 78