டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

News image
நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி
Updated On :14 பிப்ரவரி 2021, 10:59 am

DIN

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

ரூ.3,370 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (பிப்.14) தொடக்கி வைத்தார்.

9.06 கிலோ மீட்டர் மெட்ரோ வழித்தடம் வடசென்னையை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துடன் இணைக்கும்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.

கடற்கரை - அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதை:

இதேபோன்று சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதையைபிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

துறைமுக போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.293.40 கோடி செலவில் 22.1 கிலோமீட்டர் தூரம் ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த ரயில் பாதை சென்னை, எண்ணூர், துறைமுகங்களை இணைப்பதுடன் முக்கிய தளங்கள் வழியாக செல்லும்.

Story image

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே ரயில் பாதை:

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் தொடக்கி வைத்தார்.

ரூ.423 கோடி மதிப்பில் 228 கிலோ மீட்டர் தூரம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை விரைவான போக்குவரத்திற்கு உதவும்.

மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தால் எழும்பூர் - கன்னியாகுமரி இடையே ரயில்வே லைனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

Story image

ரு.1000 கோடியில் ஐஐடி வளாகத்திற்கு அடிக்கல்:

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஐஐடி டிஸ்கவரி வளாகம் கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் முதல் பகுதி 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.