மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜியை திமுகவின் கனிமொழி வியாழக்கிழமை சந்தித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜியை திமுகவின் கனிமொழி வியாழக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பானது, தில்லியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் நடைபெற்றது. இதுகுறித்து டிவிட்டரில் கனிமொழி பதிவிட்டிருப்பது, “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்.”

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தில்லிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மம்தா சந்தித்து வருகிறார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மம்தா ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com