உலகின் பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழி உலகின் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த மொழி என்று கூறியுள்ளார்.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் மாறாதது.
பழமையான தமிழ் மொழி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் இதை எண்ணி பெருமைகொள்ள வேண்டும். தமிழ் மொழியை எண்ணி நான் எப்போதும் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.